Saturday, April 28, 2012

Maiden post

ப்ளாக் ஆரம்பிப்பது அல்லது எழுதுவது என்பது  ஒரு கனவாகவே ரொம்ப நாளாக இருந்து வந்த ஒன்றுதான். ஆனால் ஒவ்வொரு முறை கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்வதும் எழுந்திருப்பதும் நடந்ததே  ஒழிய உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. பள்ளியில் கணக்கு டீச்சர் சொன்னது ஞாபகம் வந்தது. எழுத எழுததான் கணக்கு புரியும். அது ப்ளாக்க்கும் பொருந்தும்ங்கறது உண்மைதான். எல்லா குழப்பமும் வந்தது. தமிழ்ல எழுதறதா இல்லை இங்கிலிஷ்ல எழுதறதா ? எப்படி ஸ்டார்ட் பண்றது ? எத மொதல்ல எழுறது ? நடுவுல ஒயிப் வேற கேக்க ஆரம்பிச்சுட்டா உங்களுக்கு ஏன் இந்த விஷ பரிட்சைன்னு?

ரொம்ப குழம்ப வேண்டாம்,  நீங்க  ப்ளாக் எழுத ஆரம்பிச்ச  கதையே நம்பளோட முதல் போஸ்டா இருக்கட்டும்னு கடைசியா தர்ம பத்தினியே ஒரு ஐடியா கொடுத்து வைக்க சுப யோக சுப தினமா இன்னிக்கு முதல் போஸ்டை ஆரம்பிச்சாச்சு.

என்னை பத்தி சொல்லணும்னா, பூர்வீகம் ராஜ மன்னார்குடி. படிச்சது நேஷனல் ஹையர்  செகண்டரி ஸ்கூல். திருச்சியில்
சேஷசாயி இன்ஸ்ட்யுட்டில்    மெக்கானிகல் இன்ஜினியரிங் டிப்ளமா. பிற்பாடு பிட்ஸ் பிலானியில் சேர்ந்து   MS படிச்சு  முடிச்சு தற்சமயம் மெட்ராஸ்ல ஒரு பிரைவேட் கம்பெனியில் உத்தியோகம். 

ஆரம்ப காலத்துல ஊர் ஊரா சுத்தறதே  வேலையா இருக்கப் போக, அதுவும் இல்லாம கல்கத்தா பக்கமாவே போஸ்டிங் வேற. சின்ன வயசுல அப்பா திட்டி திட்டி ஹிந்தி கிளாஸ்ல சேர்த்து  விட்டதுனால, ஹிந்தி படிக்கவும் கத்துண்டாச்சு. ஹாஸ்டல் நாள்லேந்தே கிடைச்சதை சாப்பிடறதும் பழக்கமாச்சு.  இது எல்லாம் சேர்ந்து ஊர் சுத்தறதை ஒரு பிடிச்ச விஷயமா மாத்திருக்கு.

போறாத குறைக்கு இளைய மச்சினன் பார்த்தசாரதியும் சப்போர்ட் பண்ண ஆரம்பிக்க, டூர் போறதுங்கறது  become a passion nowadays .

 காலேஜ் நாட்களில் மலைக்கோட்டையும் ஸ்ரீரங்கமும்தான்
weekend getaway .  இப்போ கூட  பொதுவாவே வீக் என்ட்ஸ்லாமே எதாவது கோவில் விசிட்தான். அப்பப்ப நார்த் இந்தியா பக்கமும் போறதுண்டு.

Profile  பேஜ்ல அப்டேட் பண்றத ஒரு போஸ்ட் புல்லா எழுதியாச்சு.

இனிமே  நம்பளோட travel ஐப் பத்தி மொதல்ல எழுத ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கேன். ஆனா ஒரு பக்கம் எழுதுவதுங்கறதே மூணு மணி நேரம் புடிச்சுது. ஓகே. ஒரு வழியா ஸ்டார்ட் பண்ணிட்டோம்.

Next சண்டே continue பண்றேன். Bye




3 comments: